கொழும்பு துறைமுகத்தின் கரையோரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் வோயேஜ் டேட்டா ரெக்கோர்டர் (விடிஆர்) குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கப்பல்களுக்கான கருப்பு பெட்டியாகக் கருதப்படும் வி.டி.ஆரின் தரவை பொலிசார் ஆய்வு செய்வார்கள் என பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
கப்பலின் கப்டன் மற்றும் குழுவினரிடமிருந்து 20 அறிக்கைகளை பொலிசார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குற்றவியல் புலனாய்வுத்துறையின் தடயவியல் பிரிவினர் மற்றும் அரசாங்க ஆய்வாளர் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விசாரிக்க சூழ்நிலை சான்றுகள் மற்றும் நீர் மாதிரிகளையும் சேகரித்தனர்.
கப்டன், உரிமையாளர் நிறுவனம் மற்றும் உள்ளூர் முகவருக்கு இடையேயான தகவல்தொடர்பு வி.டி.ஆரில் இருப்பதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன விளக்கினார்.
வி.டி.ஆர் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதன் மூலம் இலங்கையின் கடற்கரையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரணமான தரப்புக்களை காவல்துறை அடையாளம் காணும் என்று அவர் உறுதியளித்தார்.




