80 மில்லியன் தடுப்பூசியை உலகுடன் பகிர்ந்து கொள்ளும் அமெரிக்கா: இலங்கைக்கும் கிடைக்கும்!

Date:

அமெரிக்கா கோவிட் -19 தடுப்பூசிகளை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கும் திட்டத்தில், ஜூன் இறுதிக்குள் குறைந்தது 25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான் மற்றும் பசிபிக் தீவுகள் என ஆசியா நாடுகளிற்கு ஏறக்குறைய ஏழு மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.

ஆபிரிக்க யூனியனுடன் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளுக்கு  சுமார் 5 மில்லியன் தடுப்பூசிகள் அனுப்பப்படும்.

இந்த திட்டத்தில் 75% தடுப்பூசிகள், கோவாக்ஸ் எனப்படும் உலகளாவிய தடுப்பூசி திட்டத்துடன் பகிரப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 25% தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுடன் நேரடியாக பகிரப்படும்.

சுமார் 6 மில்லியன் தடுப்பூசிகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு அனுப்பப்படும். குறிப்பாக பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடோர், பராகுவே, பொலிவியா, குவாத்தமாலா, எல் சால்வடோர், ஹோண்டுராஸ், பனாமா, ஹைட்டி மற்றும் பிற கரீபியன் சமூக நாடுகள் மற்றும் டொமினிகன் குடியரசுகளிற்கு அவை பகிரப்படும்.

6 மில்லியன் தடுப்பூசிகள் மெக்சிகோ, கனடா, கொரியா குடியரசு, மேற்குக் கரை மற்றும் காசா, உக்ரைனுக்கு அனுப்பப்படும். , கொசோவோ, ஹைட்டி, ஜோர்ஜியா, எகிப்து, ஜோர்டான், ஈராக் மற்றும் ஏமன், மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி போட பயன்படுத்தப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்