ஹாங்காங்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ10 கோடி மதிப்பிலான வீடு இலவசம்!

Date:

ஹாங்காங்கில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு இலவசமாக ரூ10.14 கோடி மதிப்பிலான வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பல இலவசங்களை அறிவித்துள்ளனர். அவரவர் தங்களின் வியாபாரத்திற்கேற்ப சலுகைகளை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹாங்காங்கில் உள்ள ஷினோ குரூப்ஸ் பிலந்தோபிக் ஆர்ம் என் ஜி டேங்க் ஃபாங்க் என்ற தொண்டு நிறுவனம் சைனீஸ் எஸ்டேட் ஹோல்டிங்க்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி அந்நிறுவனம் குவான் தாங் என்ற பகுதியில் கட்டி வரும் கிராண்ட் சென்ரல் என்ற கட்டிடத்தில் 449 சதுரடி கொண்ட ஒரு வீட்டை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த கிராண்ட் சென்ரல் என்ற கட்டிடம் மிகப்பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதில் வீடுகளை பெற பலர் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வீட்டை கொரோனா தடுப்பூசி போட்டவரக்களுக்கு இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வீட்டின் இந்திய மதிப்பு ரூ10.14 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீட்டை இலவசமாக பெற விண்ணப்பங்களை தொண்டு நிறுவனம் தற்போது பெற்று வருகிறது. அந்த வீட்டை இலவசமாக பெற இரண்டே விதிகள் மட்டுமே உள்ளது. ஒன்று விண்ணப்பம் செய்பவர் ஹாங்காங் வாழ் குடிமகனாக இருக்க வேண்டும் மற்றொன்று அவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டதற்கான சான்றதழை அளிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்களில் யாருக்கு வழங்கப்படும், எப்படி வழங்கப்படும் என்பது குறித்து அந்நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஹாங்காங்கை பொறுத்தவரை மொத்தம் 75 லட்சம் பேர் குடிமகனாக வசித்து வருகின்றனர். அதில் 12 சதவீதத்தினர் மட்டுமே இவரை இரண்டு டோஸ் மருந்துகளை எடுத்துள்ளனர். அந்த சதவீதத்தை அதிகரிக்கவே இந்த ஆஃபரை தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வழங்கியுள்ளதாக சைனீஸ எஸ்டேட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்