பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியில் செல்பவரிடம் உத்தியோகபூர்வ அடையாள அட்டைக்கு கூடுதலாக, அந்த நபர் அத்தியாவசிய கடமைகளைச் செய்ய அலுவலகத்தில் அல்லது வெளியில் இருக்க வேண்டும் என்பதை அந்தந்த நிறுவனத் தலைவர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டின் போது அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்க நடமாடும் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் செல்லுபடியாகும் காலம் ஜூன். 7 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1