ஐபிஎல் மட்டும் நடக்கட்டும் தோனி யாருனு பாப்பிங்க: தீபக் சாஹர் அதிரடி!

Date:

ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் 7 போட்டிகளில் தோனி 37 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. கேப்டன் மகேந்திரசிங் தோனி மொத்தம் 37 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இது பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தோனிக்கு வயசாகிவிட்டது, அதனால்தான் அடித்து ஆட திணறி வருகிறார். அவர் இந்த சீசனோடு ஓய்வு பெற்றுவிடுவார் என பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள சிஎஸ்கே பந்துவீச்சாளர் தீபக் சாஹர், ஒத்துவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது தோனியின் அதிரடி அவதாரத்தைப் பார்ப்பீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

“15-20 வருடங்களாக ஒரு பேட்ஸ்மேன் ஒரே மாதிரி ஆட முடியாது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காதவரால் ஐபிஎல் தொடரில் எடுத்த உடனே அதிரடி காட்ட முடியாது” எனத் தெரிவித்தார்.

“சிஎஸ்கே அணிக்காக பெஸ்ட் பினிஷராக தோனி இருந்து வருகிறார். இந்த சீசனிலும் இருப்பார் என நம்புகிறோம். 2018-19ஆம் ஆண்டுகளில் முதல் சில போட்டிகளில் தடுமாறிய தோனி, அதன்பிறகு அதிரடியாக விளையாடி தான் யார் என்பதை நிரூபித்தார். இந்த சீசனிலும் அதேபோன்று அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. தற்போதுவரை முதல் 7 போட்டிகள்தான் நடந்து முடிந்துள்ளது. இதில் நாங்கள் (சிஎஸ்கே) இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு நிச்சயம் கோப்பை வெல்வோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

தீபக் சாஹர் 14ஆவது சீசனில் இதுவரை 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். எகனாமி 8.04 மட்டுமே. “நான் சிஎஸ்கேவுக்காக நான்கு வருடங்களாக விளையாடி வருகிறேன். தோனி என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். இங்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைத்ததன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது” எனக் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்