25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இந்தியா

ஊரடங்கு எதிரொலியால் பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி! (VIDEO)

ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து பல்வேறு திருமணங்கள் அவசரவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டது. ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் – தீக்‌ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக சம்ப்ராதயபடி மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் முடித்தார்.

இதையடுத்து இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசிபெற்றுகொண்டனர். விமான பயணம் என்பதால் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் பயணத்தின்போது திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகிவருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

புலிப்பூச்சாண்டி வேண்டாம்: பழ.நெடுமாறனின் விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

Pagetamil

அபாய கட்டத்தைக் கடந்தார் சைஃப் அலிகான்; 7 விசாரணைக் குழுக்கள் அமைப்பு

Pagetamil

Leave a Comment