சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தங்கி வருகிறார். தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தான் தங்கியிருக்கும் அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதியளிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, 2011ம் ஆண்டு முதல் தங்கியிருக்கும் அதே வீட்டில் தங்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சகோதரர் மறைவினால் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்களாவை காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார். அதேவேளையில், சில முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களின் பங்களாக்களை காலி செய்து விட்டனர்.




