கிளிநொச்சியில் 15 வயதான மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியொருவர் நேற்று இரவு 9 மணியளவில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இன்று நடந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.



