மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (22) சனிக்கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும், வாழைச்சேனை, கிரான் மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், செங்கலடி, வவுனதீவு, ஆரையம்பதி
மற்றும் பட்டிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவரும்,
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 08 பேருமாக மொத்தமாக 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளைப் போணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பேணுவதுடன், முகக் கவசங்களை ஒழுங்கான முறையில் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.