27.4 C
Jaffna
March 20, 2023
கிழக்கு

காரைதீவு, நிந்தவூரில் அதிரடி நடவடிக்கை : விதிகளை மீறுவோருக்கு வீதியிலேயே பரிசோதனை!

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (21) நிந்தவூர் பிரதேச வீதியோர வியாபாரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு எதிராக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தலைமையில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இதே போன்று இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் இணைந்து சிலருக்கு இன்று மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனை பொறுபேறுகள் நோய்த்தொற்று தொடர்பில் நெகட்டிவ் என முடிவு கிடைக்கப்பெற்றதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் கற்றுத்தான் சாதிக்க வேண்டும் என்பதல்ல, எங்கிருந்தாலும் சாதிக்கலாம் – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்

Pagetamil

கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் செயலமர்வு

Pagetamil

நாட்டை மீட்டெடுக்க உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்: றிசாத் பதியுதீன்

Pagetamil

வீதி விபத்தில் சிக்கிய அம்பாரை மாவட்ட முன்னாள் எம்.பி பியசேன காலமானார்!

Pagetamil

அவுஸ்திரேலியா செல்வதற்காக மட்டக்களப்பில் பதுங்கியிருந்த முல்லைத்தீவு நபர்கள் சிக்கினர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!