28.3 C
Jaffna
April 20, 2024
கிழக்கு

காரைதீவு, நிந்தவூரில் அதிரடி நடவடிக்கை : விதிகளை மீறுவோருக்கு வீதியிலேயே பரிசோதனை!

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (21) நிந்தவூர் பிரதேச வீதியோர வியாபாரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு எதிராக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தலைமையில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இதே போன்று இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் இணைந்து சிலருக்கு இன்று மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனை பொறுபேறுகள் நோய்த்தொற்று தொடர்பில் நெகட்டிவ் என முடிவு கிடைக்கப்பெற்றதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

24வது நாளாக கல்முனை மக்கள் போராட்டம்!

Pagetamil

சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு!

Pagetamil

சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பில் சிக்கியது

Pagetamil

14 வயது சிறுமியை கடத்திய 17 வயது காதலன் கைது!

Pagetamil

Leave a Comment