26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

கருகிய உடல்; அருகில் மண்ணெண்ணெய் கலன்: சுன்னாகத்தில் மீட்கப்பட்ட சடலத்தின் மர்மம் துலங்கியது!

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையென்பது தெரிய வந்துள்ளது.

சுன்னாகம் மயிலங்காடு ஞானவைரவர் கோவில் பின் பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. அதன் பக்கத்தில் மண்ணெண்ணெய் கொள்கலன் ஒன்றும் காணப்பட்டது.

எஸ்.பத்மநாதன் (75) என்ற வயது முதியவரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனிமையில் வாழ்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை கோயிலுக்கு சென்றவர்கள், சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இந்த சம்பவத்தில் குற்றச்செயல்கள் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தற்கொலை சம்பவமென்பது தெரிய வந்தது. முதியவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி உயிரை மாய்த்தது தெரிய வந்தது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

Leave a Comment