அரசியல் கைதிகள் விடயம்: தமிழ் எம்.பிக்கள்- அமைச்சர் தினேஷ் கலந்துரையாடல்!

Date:

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்குமிடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் இன்று (20) காலை இந்த சந்திப்பு நடந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், வே.இராதகிருஷ்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் அரச தரப்பில் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் ஒப்படைத்தனர். விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் பற்றிய முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஆடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்