29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

17 நிமிட குயிக் திருமணம்; மணமகன் கேட்ட நூதன வரதட்சணை!

இந்தியாவிலேயே அதிசயமாக உத்திரபிரதேச மாநிலம் சாஜன்பூர் பகுதியில் தனித்துவமான முறையில் 17 நிமிடத்தில் நடத்தி முடிக்கப்பட்ட திருமணம்.

சாஜன்பூர்: பெருகி வரும் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் திருமணங்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை கொண்டு எளிய முறையில் நடைப்பெற்று வருகின்றன.

இந்து திருமண முறை சடங்குகள் சம்பிரதாயங்கள் என மிக நீண்ட வழிமுறைகளை கொண்டவை. ஆனால், வித்தியாசமான முறையில் உத்திரபிரதேச சாஜன்பூர் பகுதியில் திருமண சடங்குகளை 17 நிமிடங்களில் நடத்தியுள்ளனர் ஒரு குடும்பத்தினர். மேலும், மணமகன் கேட்ட நூதன வரதட்சனையும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த திருமணமானது பாட்னா தேவி கோவிலில் மேளதாளங்களோ, கார் ஊர்வலமோ இல்லாமல் எளிமையாக நடந்தது. கோவிட் பரவல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்துவதற்காக ஊர்வலத்தை மறுத்துவிட்டார் மணமகன்.

கடந்த வியாழக்கிழமை மணமகன் புஷ்பேந்திர துபே மற்றும் மணமகள் ப்ரீத்தி திவாரி அவர்களின் சில குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவிலை 7 முறை சுற்றி வந்து 17 நிமிடங்களில் திருமணத்தை முடித்துள்ளனர்.

கொடிய வரதட்சணை நடைமுறைக்கு எதிராக ஒரு எடுத்துக்காட்டான திருமணத்தை நடத்தியுள்ளார்கள் மணமக்கள். இருப்பினும் மணமகளின் தாயார் கேட்டுக் கொண்டதின் பேரில் மணமகன் நூதன வரதட்சனையாக ராமாயணம் புத்தகத்தை கொடுக்குமாறு கேட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த இளம் ஜோடிகளான புஷ்பேந்திர துபே மற்றும் ப்ரீத்தி பேசும்போது, எல்லா இளைஞர்களும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த திருமணம் வைரலாகி மக்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.

ஊரடங்கின் காரணமாக பலரும் திருமண நிகழ்வுகளை ஒத்தி வைத்துள்ளனர். சிலர் எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர். சடங்கு சம்பிரதாயங்களோடு நடத்த விரும்புவர்களும்கூட புதிய சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றி நடத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment