17 நிமிட குயிக் திருமணம்; மணமகன் கேட்ட நூதன வரதட்சணை!

Date:

இந்தியாவிலேயே அதிசயமாக உத்திரபிரதேச மாநிலம் சாஜன்பூர் பகுதியில் தனித்துவமான முறையில் 17 நிமிடத்தில் நடத்தி முடிக்கப்பட்ட திருமணம்.

சாஜன்பூர்: பெருகி வரும் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் திருமணங்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை கொண்டு எளிய முறையில் நடைப்பெற்று வருகின்றன.

இந்து திருமண முறை சடங்குகள் சம்பிரதாயங்கள் என மிக நீண்ட வழிமுறைகளை கொண்டவை. ஆனால், வித்தியாசமான முறையில் உத்திரபிரதேச சாஜன்பூர் பகுதியில் திருமண சடங்குகளை 17 நிமிடங்களில் நடத்தியுள்ளனர் ஒரு குடும்பத்தினர். மேலும், மணமகன் கேட்ட நூதன வரதட்சனையும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த திருமணமானது பாட்னா தேவி கோவிலில் மேளதாளங்களோ, கார் ஊர்வலமோ இல்லாமல் எளிமையாக நடந்தது. கோவிட் பரவல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்துவதற்காக ஊர்வலத்தை மறுத்துவிட்டார் மணமகன்.

கடந்த வியாழக்கிழமை மணமகன் புஷ்பேந்திர துபே மற்றும் மணமகள் ப்ரீத்தி திவாரி அவர்களின் சில குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவிலை 7 முறை சுற்றி வந்து 17 நிமிடங்களில் திருமணத்தை முடித்துள்ளனர்.

கொடிய வரதட்சணை நடைமுறைக்கு எதிராக ஒரு எடுத்துக்காட்டான திருமணத்தை நடத்தியுள்ளார்கள் மணமக்கள். இருப்பினும் மணமகளின் தாயார் கேட்டுக் கொண்டதின் பேரில் மணமகன் நூதன வரதட்சனையாக ராமாயணம் புத்தகத்தை கொடுக்குமாறு கேட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த இளம் ஜோடிகளான புஷ்பேந்திர துபே மற்றும் ப்ரீத்தி பேசும்போது, எல்லா இளைஞர்களும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த திருமணம் வைரலாகி மக்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.

ஊரடங்கின் காரணமாக பலரும் திருமண நிகழ்வுகளை ஒத்தி வைத்துள்ளனர். சிலர் எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர். சடங்கு சம்பிரதாயங்களோடு நடத்த விரும்புவர்களும்கூட புதிய சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றி நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தவெக அரசின் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி...

சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வரும்...

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்