கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இலங்கையர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பொது இதனை தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் இலங்கையர்களாகவே இருப்பார்கள்.
இந்த சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அதில் செய்யப்பட வேண்டிய அனைத்து திருத்தங்களும் இரண்டாவது வாசிப்பின் போது சட்டமூலத்தில் சேர்க்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.



