29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

திரிபடையும் கொரோனா: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை; கொழும்பில் யுத்த நிறைவு நிகழ்விற்கு ஏற்பாடு!

கொழும்பில் யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக அமைக்கப்பட்ட தூபியில் நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுத்த வெற்றியை நினைவுகூர்வதுடன், கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த பகுதியில் கலந்த சில வருடங்களான மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளிற்கு கொரோனாவை காரணம் காண்பித்து, பொலிசார் ஓடியோடி வடக்கில் தடையுத்தரவுகளை பெற்று வரும் நிலையில், கொழும்பில் யுத்த வெற்றி தினத்தில் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனேகமாக நாளை கொண்டாட்டம் இடம்பெறலாமென தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் எதிர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் நினைவிடத்தில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராணுவத்தினர் பலர் அங்கு இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 பெரிய கொட்டகைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறவிருந்த நிலையில், முல்லைத்தீவின் 3 பொலிஸ் பிரிவுகள் இன்றிரவு முதல் முடக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment