மீன் பிடிப்பது பாவமென அறிவுரை கூறிய பிக்குவை அடித்தே கொன்ற இளைஞர்கள்!

Date:

கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என இளைஞர்களிற்கு ஆலோசனை சொன்ன பௌத்த பிக்கு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

வெலிகம பகுதியிலுள்ள விகாரையொன்றின் 89 வயதான விகாராதிபதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

விகாரையின் பின் பகுதியிலுள்ள கால்வாயில் மீன்களிற்கு உணவளிப்பதை விகாராதிபதி வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தை அவதானித்த விகாராதிபதி,  அந்த மீன்களை பிடிப்பது பாவம் என அறிவுரை கூறியுள்ளார்.

இறிவுரை கூறியது பிடிக்காததால், மேலும் 4 பேரை அழைத்து வந்த இளைஞன், விகாராதிபதியை கடுமையாக தாக்கியுள்ளான். படுகாயமடைந்த விகாராதிபதி, மாததறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்