கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என இளைஞர்களிற்கு ஆலோசனை சொன்ன பௌத்த பிக்கு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
வெலிகம பகுதியிலுள்ள விகாரையொன்றின் 89 வயதான விகாராதிபதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
விகாரையின் பின் பகுதியிலுள்ள கால்வாயில் மீன்களிற்கு உணவளிப்பதை விகாராதிபதி வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தை அவதானித்த விகாராதிபதி, அந்த மீன்களை பிடிப்பது பாவம் என அறிவுரை கூறியுள்ளார்.
இறிவுரை கூறியது பிடிக்காததால், மேலும் 4 பேரை அழைத்து வந்த இளைஞன், விகாராதிபதியை கடுமையாக தாக்கியுள்ளான். படுகாயமடைந்த விகாராதிபதி, மாததறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1