நீங்க நீக்கத் தேவையில்லை, நானே விலகிக்கிறேன்: இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த ஆர்ச்சர்!

Date:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜோப்ர ஆர்ச்சர் விலகியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி ஜூன் 2ஆம் தேதி முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஜோப்ரா ஆர்ச்சர், தனக்கு மீண்டும் தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டிகொடுத்த இங்கிலாந்து அணி இயக்குநர் ஆஷ்லே கில்ஸ், “இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்து நிறைய சுற்றுப் பயணங்கள் உள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்தான் எங்களுக்கு முக்கியம். இதனால், ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய லீக் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். வீரர்கள் தாய் நாட்டிற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிகொடுத்த ஆர்ச்சர், “ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய லீக் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில் நிச்சயம் பங்கேற்பேன். பங்கேற்க முடியாது என்ற முடிவு எடுப்பது மிகக் கடினம்” எனக் கூறினார். பென் ஸ்டோக்ஸ் போன்றவர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

இதனால் இங்கிலாந்து அணி நிர்வாகத்திற்கும், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற இங்கிலாந்து அணி ஐபிஎல் வீரர்களுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஐபிஎலில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்களைத் தேர்வு செய்ய வாய்ப்பில்லை என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் ஆர்ச்சர் காயம் காரணமாக நியூசிலாந்து சுற்றுப் பயணத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து அணி நிர்வாகம், “ஆர்ச்சர், சக்ஸஸ் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வந்தார். அவர் பந்துவீசும்போது தோள்பட்டையில் வலியை உணர்ந்துள்ளார். அவருக்குத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால், நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இவர் பங்கேற்க மாட்டார்” எனத் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்