வாஸ்து சாஸ்திரம் என்பது நாம் வீட்டை கட்டுவதற்கான விஷயங்களைக் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், நாம் வீட்டில் எந்த விஷயங்களை நாம் கடைப்பிடிப்பதால் வீட்டில் நன்மை ஏற்படும், நமக்கும் நற்பலன்கள் ஏற்படும்.
எல்லா நாட்களும் நாம் நினைத்தது நடந்து விடுவதில்லை. நாம் எல்லா செயல்களும் சரியாக செய்தும் நாம் நினைப்பது நடந்து முடிவதில்லை. இதற்கு காரணம் நாம் காலையில் எழுந்ததும் நாம் கடைப்பிடிக்கின்ற சில பழக்க வழக்கங்கள், நமக்கான நன்மையையும், சில விஷயங்களால் நமக்கு தீங்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாஸ்து சாஸ்திரப்படி நாம் காலையில் எழுந்ததும், மற்றவர்களின் நிழலைப் பார்க்கக்கூடாது. இதனால் உங்கள் பணி நிறைவேறாமல் விரக்தி ஏற்படலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம். காலையில் எழுந்ததும் வீட்டில் வைத்திருக்கும் சுவாமி படங்களைப் பார்ப்பது நல்லது.
அதே போல எழுந்ததும் வனவிலங்குகளின் புகைப்படத்தை பார்க்க வேண்டாம். வீட்டின் சுவரில் வன விலங்குகளின் படங்கள் ஒட்டி வைக்க வேண்டாம்.
நம்முடைய உள்ளங்கையைப் பார்ப்பதும், வீட்டில் இருக்கும் சுவாமி படங்களைப் பார்ப்பதும், பூக்கள் ஆகியவற்றைப் பார்ப்பது நல்லது.




