இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,26,098 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கொரோனா வில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36,73,802 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனாவிலிருந்து 2,04,32,898 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கொரோனாவிலிருந்து 3,53,299 பேர் குணமடைந்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,890 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,66,207 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 18,04,57,579 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 31,30,17,193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 16,93,093 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன . இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




