யாழில் கொரோனா என அடித்துச் சொன்னவர்; நம்ப மறுத்த வைத்தியர்கள்: குடும்பத்திற்கே தொற்று!

Date:

நயினாதீவு ஆலய பணியாளரின் குடும்பத்தில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவின்படி, அவர்களிற்கு தொற்று உறுதியானது.

நயினாதீவு நாகபூசணியம்மன் ஆலய பணியாளர் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு ஆளானார்.

அவரிற்கு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பிரதேச வைத்தியசாலையொன்றிற்கு பிசிஆர் பரிசோதனைக்கு சென்றிருந்தார். எனினும், அவரிற்கு தொற்று வாய்ப்பில்லையென கூறி வைத்தியசாலையில் பிசிஆர் சோதனை நடத்தப்படவில்லை.

மீண்டும் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இரண்டாவது முறையும் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கவில்லை. அவரிடம் தொற்றிற்கான அறிகுறி தென்படவில்லையென வைத்தியசாலையில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த சில நாட்களில் அவருக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டு, நள்ளிரவில் பிறிதொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில தொற்று உறுதியானது.

அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா அபாயம் ஏற்பட்ட பின்னரும் வெளியிடங்களிலிருந்து நயினாதீவிற்கு வருபவர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா அபாயமிக்க தெற்கு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்றனர். எனினும், வடக்கு சுகாதார திணைக்களம் அதை கண்டு கொள்ளவில்லை.

ஏனைய சில தீவுப்பகுதிகளில் வெளியார் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நயினாதீவு திறந்து விடப்பட்டதால் அபாய நிலை உருவாகியுள்ளது.

தொற்றிற்குள்ளானவர்கள் படகு பயணம் உள்ளிட்ட பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்