Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேலின் கொலைவெறி தாண்டவம் தொடர்கிறது: காசாவில் பேரவலம்;சர்வதேச ஊடக நிறுவன அலுவலகமும் தகர்ப்பு!

பாலஸ்தீனத்தின் மேற்கு காசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதலில் இடிந்து விழுந்த அகதிகள் முகாமில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த குழந்தையின் தாயாரும் கொல்லப்பட்டார். அவரது கணவர், மனைவிக்கு இறுதிவிடை கொடுக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள் ருவிற்றரில் பகிரப்பட்டு வருகிறது.

அதேநபர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது குழந்தையை சந்திக்கும் வீடியோவும் வெளியாகியது.

இதேவேளை, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் கோரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 குழந்தைகளும் உள்ளடங்குகிறார்கள்.

அத்துடன், காசாவில் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள், அலுவலகங்கள் இயங்கிய அடுக்கு மாடி கட்டிட தொகுதியின் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

Leave a Comment