29.5 C
Jaffna
March 28, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேலின் கொலைவெறி தாண்டவம் தொடர்கிறது: காசாவில் பேரவலம்;சர்வதேச ஊடக நிறுவன அலுவலகமும் தகர்ப்பு!

பாலஸ்தீனத்தின் மேற்கு காசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதலில் இடிந்து விழுந்த அகதிகள் முகாமில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த குழந்தையின் தாயாரும் கொல்லப்பட்டார். அவரது கணவர், மனைவிக்கு இறுதிவிடை கொடுக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள் ருவிற்றரில் பகிரப்பட்டு வருகிறது.

அதேநபர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது குழந்தையை சந்திக்கும் வீடியோவும் வெளியாகியது.

இதேவேளை, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் கோரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 குழந்தைகளும் உள்ளடங்குகிறார்கள்.

அத்துடன், காசாவில் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள், அலுவலகங்கள் இயங்கிய அடுக்கு மாடி கட்டிட தொகுதியின் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

Leave a Comment