இஸ்ரேலின் கொலைவெறி தாண்டவம் தொடர்கிறது: காசாவில் பேரவலம்;சர்வதேச ஊடக நிறுவன அலுவலகமும் தகர்ப்பு!

Date:

பாலஸ்தீனத்தின் மேற்கு காசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதலில் இடிந்து விழுந்த அகதிகள் முகாமில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த குழந்தையின் தாயாரும் கொல்லப்பட்டார். அவரது கணவர், மனைவிக்கு இறுதிவிடை கொடுக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள் ருவிற்றரில் பகிரப்பட்டு வருகிறது.

அதேநபர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது குழந்தையை சந்திக்கும் வீடியோவும் வெளியாகியது.

இதேவேளை, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் கோரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 குழந்தைகளும் உள்ளடங்குகிறார்கள்.

அத்துடன், காசாவில் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள், அலுவலகங்கள் இயங்கிய அடுக்கு மாடி கட்டிட தொகுதியின் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்