நெல்லியடியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 8 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Date:

நெல்லியடி பொலிஸ் பிரிவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 8 குடுமபங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை அல்வாய் பகுதியிலுள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டிருந்த நிலையில், தகவலறிந்து நெல்லியடி பொலிசாரும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரும் அந்த வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் வருவதை அவதானித்ததும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைதெறிக்க தப்பியோடினர். சிலர் காலணிகளை எடுக்காமலும் தப்பியோடினர்.

பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீட்டில் கைப்பற்ற கமராவில் பதிவாக புகைப்படங்களின் அடிப்படையில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் தனிமைப்படுத்தப்படடிருந்த ஒருவரும் உள்ளடங்குகிறார். நெல்லியடி சுபாஸ் பேக்கரி பணியாளரான அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

8 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்