‘கணவர்கள், மனைவிகள் பரிவர்த்தனை சங்கம்’ என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை இயக்கி வந்த விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுரலியவில் வசிக்கும் 25 வயதானவரே கைதானார்.
ஏராளமாக பெண்களின் புகைப்படங்கள் அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கு ஆபாசமான குறிப்புக்கள் இடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து, களுத்துறை பிரதேச சிறப்பு குற்றப்பிரிவு அவரை கைது செய்தது.
ஆபாசமான வார்த்தைகளுடன் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டதற்காக சந்தேக நபருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் பொலிசார் தாக்கல் செய்துள்ளனர்.
பெண்களை இரகசியமாக புகைப்படம் எடுக்க அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம் மாதம் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1