இலங்கையில் கணவர்கள், மனைவிகள் பரிவர்த்தனை சங்கம் நடத்தியவர் கைது!

Date:

‘கணவர்கள், மனைவிகள் பரிவர்த்தனை சங்கம்’ என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை இயக்கி வந்த விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுரலியவில் வசிக்கும் 25 வயதானவரே கைதானார்.

ஏராளமாக பெண்களின் புகைப்படங்கள் அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கு ஆபாசமான குறிப்புக்கள் இடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து, களுத்துறை பிரதேச சிறப்பு குற்றப்பிரிவு அவரை கைது செய்தது.

ஆபாசமான வார்த்தைகளுடன் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டதற்காக சந்தேக நபருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் பொலிசார் தாக்கல் செய்துள்ளனர்.

பெண்களை இரகசியமாக புகைப்படம் எடுக்க அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம் மாதம் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்