Pagetamil
குற்றம்

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 30 பேர் கைது!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து நேற்று (13) மற்றும் இன்றைய தினங்களில் (14) சிலாபம், சமிந்துகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இந்த வீடு சுற்றிவளைக்கப்பட்ட போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். கிராமவாசிகளின் உதவியுடன் இன்று காலை நடத்தப்பட்ட தேடுதலில் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்பாடு செய்து கொடுத்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!