26.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இன்று 60 பேர்: வடக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள்!

இன்று (14) வட மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று வடமாகாணத்தை சேர்ந்த 585 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 48 பேர், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவர், மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கிளிநொச்சியில் தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்களான 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் இருந்து 7 பேரும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 40 பேரும், சிறைச்சாலையிலிருந்து ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் செர்க்கப்பட்ட 4 பேர், திருநேல்வேலி தனியார் வைத்தியசாலையில் ஒருவர்,  யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கரவெட்டி சுகாதார வைததிய அதிகாரி பிரிவில் ஒருவர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும் தொற்றிற்குள்ளாகினர்

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment