மாகாணங்களிற்கிடையில் வர்த்தகத்தில் ஈடுபடும் யாழ் வர்த்தகர்களிற்கான அறிவித்தல்!

Date:

யாழ் குடாநாட்டிலிருந்து வேறு மாகாணங்களுக்கு பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர்/ கடை உரிமையாளர்களுக்கான அறிவித்தல்.

இன்றிலிருந்து புதிய நடை முறையின் அடிப்படையிலேயே யாழ்குடா நாட்டில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வது/பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் லொறி உரிமையாளர்கள் /கடை உரிமை யாளர்கள் யாழ் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில்ஒப்படைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி பெற்றுத் தரப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கும்/ லொறி உரிமையாளர் பொதிகள் போக்கு வரத்தில் ஈடுபடு வோருக்குதெரியப்படுத்துகின்றோம்.

ஆகையால் விரைவாக படிவங்களை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்ப டைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இத்தகவலை இந்த சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

-யாழ் வணிகர் கழகம்-

 

 

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்