29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்த நபரிடம் உரிய ஆவணம் கேட்ட பொலீஸ் ; ஆவணமாக ஐந்தடி பாம்பை காட்டிய நபர் – தெறித்து ஓடிய பொலீசார்!

கர்நாடக மாநிலத்தில், ஆவணம் கேட்ட போலீசாரிடம் ஐந்தடி பாம்பை காட்டி பதற வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரில், காவல் துறையினர் முறையான ஆவணங்களைக் கேட்ட போது, பிடித்து வந்த நல்லப் பாம்பை சாட்சியாக நபர் ஒருவர் காட்டிய சம்பவம், திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியமின்றி வெளியே சுற்றித் திரிவோரைப் பிடிக்க, பல்வேறு இடங்களில், சோதனைச் சாவடி மையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மைசூர் மாளிகை அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி, அதிகாரிகள் விசாரித்தனர். அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வந்ததாகக் கூறிய அந்த இளைஞரிடம், காவல் துறையினர் உரிய ஆவணங்களைக் காட்டும்படி கறாராக கேட்டுள்ளனர்.

குடியிருப்புகளுக்குள் புகும் பாம்புகளை மீட்கும் வீரரான அந்த இளைஞர், வேறு வழியின்றி, பிடித்து வந்த நல்லப் பாம்பையே இரு சக்கர வாகனத்தில் இருந்து ஆவணமாக எடுத்துக் காட்டினார்.

ஆவணங்களைக் கேட்ட அதிகாரிகள், சுமார் ஐந்தடி பாம்பைக் கண்டதும், ஐந்தடி தூரம் தெறித்து ஓடினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment