மேல் மாகாணத்தில் இருந்து நேற்று 1,234 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று, 2,624 தொற்றாளர்கள் நாடு முழுவதுமிருந்து அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 128,530 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்து 551 பேர் அடையாளம் காணப்பட்டனர். களுத்துறை மாவட்டத்திலிருந்து 362 பேர், கொழும்பு மாவட்டத்திலிருந்து 321 பேர், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 184 பேர், குருநாகல் மாவட்டத்திலிருந்து 177 பேர், காலி மாவட்டத்திலிருந்து 170 பேர், இரத்னபுரி மாவட்டத்திலிருந்து 128 பேர், யாழ் மாவட்டத்திலிருந்து 109 பேர், மொனராகலை மாவட்டத்திலிருந்து 92 பேர், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 83 பேர், பொலன்னருவை மாவட்டத்திலிருந்து 54 பேர், கண்டி மாவட்டத்திலிருந்து 50 பேர், புத்தளம் மாவட்டத்திலிருந்து 46 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 41 பேர், கேகாலை மாவட்டத்திலிருந்து 39 பேர், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 36 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 51 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.




