நாட்டில் நேற்று 2,624 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 128,530 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 1,148 பேர் தொறறிலிருந்து குணமடைந்தனர்.இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக உயர்ந்தது.
தற்போது, 22,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று சந்தேகத்தில் 1,249 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
நேற்று 26 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. மரணங்களின் எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், நேற்று 17,000 இற்கும் அதிகமானவர்கள் சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.







