ரயில் சேவைகள் நாளை முதல் மாகாணங்களுக்குள் மட்டுமே இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ள முறை தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




