அபிஷேக் பச்சனிடம் இருந்து ஐஸ்வர்யா ராயை கவர விரும்பிய பாலிவுட்டின் மூத்த நாயகன்!

Date:

பாலிவுட்டின் மூத்த நாயகனான நடிகர் இம்ரான் ஹஷ்மி, ஐஸ்வர்யா ராயை அவரின் கணவர் அபிஷேக் பச்சனிடம் இருந்து அபகரிக்க விரும்புவதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது பற்றி தற்போது பேசப்படுகிறது.

பாலிவுட் படங்களில் நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பதற்கு பெயர் போனவர் நடிகர் இம்ரான் ஹஷ்மி. மேலும் மனதில் பட்டதை பேசுபவதற்கும் பெயர் போனவர். அவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் பற்றி முன்பு தெரிவித்தது குறித்து தற்போது பேசப்படுகிறது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய காபி வித் கரண் நிகழ்ச்சியில் தான் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசினார் இம்ரான் ஹஷ்மி. அவராக பேசவில்லை, கரண் கேட்ட கேள்விக்கு ஆர்வக்கோளாறில் பதில் அளித்துவிட்டார்.

சக நடிகர்களிடம் இருந்து நீங்கள் திருட விரும்புவது எது என்று இம்ரான் ஹஷ்மியிடம் கரண் ஜோஹர் கேட்டார். அப்பொழுது அபிஷேக் பச்சனிடம் இருந்து எதை திருட விரும்புகிறீர்கள் என்று கரண் கேட்க சற்றும் யோசிக்காமல், அவரின் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் என பதில் அளித்தார் இம்ரான்.

நடிகர் ரன்பிர் கபூரிடம் இருந்து எதை திருட விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவரின் காதலிகள் என்றார் இம்ரான். ரன்பிர் கபூர் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருக்கிறது. நடிகைகள் தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப் ஆகியோர் ஒரு காலத்தில் ரன்பிர் கபூரை காதலித்தார்கள்.

தற்போது ரன்பிர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி ரன்பிரை விடுங்க, நடிகர் சயிஃப் அலி கானிடம் இருந்து அவரின் மனைவி கரீனா கபூரை திருட விரும்புவதாக கூறினார் இம்ரான். ஆக சக நடிகர்களின் மனைவி, காதலிகளை திருட விரும்புகிறார் இம்ரான் ஹஷ்மி.

அதே நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் என்கிற வார்த்தையை கேட்டதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன என்று கரண் கேட்க, ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று பதில் அளித்து பலரையும் அதிர வைத்தார் இம்ரான்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்