சிறுநீரக பிரச்சனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது.
பிரபல நடிகர் மன்சூர் அலி கானுக்கு சிறுநீரகத்தில் பெரிய கல் அடைப்பு இருப்பதால் அவர் வலியால் துடித்து வந்துள்ளார். இந்நியைில் அவரை அமைந்தகரையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்றவிருக்கிறார்கள்.
மன்சூர் அலி கான் மருத்துவமனையில் அனுமதி என்கிற தகவல் அறிந்த ரசிகர்கள் கொரோனாவோ என்று நினைத்து பயந்துவிட்டனர். அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார் மன்சூர் அலி கான். அவருக்கு ஒரு சிலரே வாக்களித்தனர். இதையடுத்து படுதோல்வி அடைந்தார். கமல் ஹாசனுக்காக கோவை தெற்கு தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு தொண்டாமுத்தூரில் போட்டியிட்டதாக மன்சூர் அலி கான் தெரிவித்தார்.




