மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நோர்வூட் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 9 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் பணிபுரியும் 100 பேருக்கு இன்று அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்ததை தொடர்ந்து, துரித அன்ரிஜன் சோதனைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
தொழிற்சாலையின் ஊழியர்களுடன் தொடர்பிலிருந்த சுமார் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.




