நாடாளுமன்றத்தின் ஏப்ரல் மாத அமர்வுகள் எதிலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளத் தவறியுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையமான Manthri.lk இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 9 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றன. இதில் எந்த அமர்விலும், 4 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
அமைச்சர் விமல் வீரவன்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விமலவீர திசாநாயக்க, பழநி திகம்பரம் ஆகியோரே ஏப்ரல் மாத அமர்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் ஆவர்.




