இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
தற்போதைய சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிற்கு பதிலாக, புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தின் பெயர் நாடாளுமன்ற சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் ராஜரத்தினம், 2019 ஆம் ஆண்டில் பொது சேவை ஆணைக்குழுவால் பிரதி மன்றாடியார் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
அப்போதைய பிரதி மன்றாடியார் நாயகம் தில்ருஷி டயஸிற்கும், அவந்த்-கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதிக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் சர்ச்சையை தொடர்ந்து, பிரதி மன்றாடியார் நாயகமாக சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.




