யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (4) இரவு முதல் தனிமைப்படுத்தப்படுகிறது.
கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு ஆகிய (ஜே/326, ஜே/ 327) கிராம சேவகர் பிரிவுகளே உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொடிகாமம் சந்தையுடன் தொடர்புடைய 21 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




