மது அருந்தவதற்காக பணம் சேகரிக்க விபரீத செயலில் ஈடுபட்ட யாழ் இளைஞன் கைது!

Date:

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தர் சிலை இருந்த அறையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார்.

எனினும், புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த கொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மதுபோதைக்கு அடிமையான இளைஞன், மது அருந்துவதற்காக இரும்புகளை சேகரித்த போதே இந்த சம்பவம் நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

spot_imgspot_img

More like this
Related

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்