#ResignModi ஹேஷ்டேக்கை முடக்கிய பேஸ்புக் நிறுவனம்;சிலமணி நேரங்களிலேயே முடக்கத்தை ரத்து செய்த காரணம் என்ன?

Date:

கொரோனா நெருக்கடியை அரசாங்கம் மோசமாக கையாளுவதாக வெளியாகும் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் #ResignModi எனக் குறிக்கப்பட்ட இடுகைகளை பேஸ்புக் தடை செய்தது. எனினும் சில மணிநேரங்களுக்குப் பிறகு அதை தவறு என்று கூறி தடையை நீக்கியது.

முன்னதாக, நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த தடை, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படவில்லை என பேஸ்புக் தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா நெருக்கடியை அரசாங்கம் கையாளுவதை விமர்சிக்கும் இடுகைகளை தணிக்கை செய்த முதல் சமூக ஊடக நிறுவனம் பேஸ்புக் அல்ல. ட்விட்டர் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் கொரோனா தொடர்பான பல போலிச் செய்திகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

“இந்த ஹேஷ்டேக்கை நாங்கள் தற்காலிகமாகத் தடுத்தோம். இந்திய அரசு எங்களிடம் கேட்டதால் அல்ல. பின்னர் தவறை உணர்ந்து அதை மீட்டெடுத்துள்ளோம்.” என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் அது எதனால் நடந்தது என விரிவாக கூறவில்லை.

பேஸ்புக் அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காக ஹேஷ்டேக்குகளையும் இடுகைகளையும் தடுக்கிறது. சில தொகுதிகள் மனித செயல்பாடுகள் மூலமும், சில தானியங்கி முறையிலும் செய்யப்படுகின்றன.

#ResignModi எனக் குறிக்கப்பட்ட இடுகைகளைத் தடுப்பது மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் கடைசி கட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னால் வந்தது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்