அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகளும் 30ஆம் திகதி வரை மூடல்!

Date:

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், முன்பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய கல்வி அமைச்சர், மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகள் தொடர்பான அனைத்து முடிவுகளும் எட்டப்படும் என்றார்.

அடுத்த வாரம் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடி வார இறுதியில் ஒரு முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் கூறினார்.

பாடசாலைகள் மூடப்படும் முடிவை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுத்ததாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில் நாட்டின் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்