ஈராக் வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர் வெடிப்பால் 27 கொரோனா நோயாளிகள் பலி!

Date:

தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இங்கு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது..

ஈராக் தலைநகரின் தியாலா பிரிட்ஜ் பகுதியில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து, ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்டதாக ஈராக் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல நோயாளர் காவு வண்டிகள் மருத்துவமனையை நோக்கி விரைந்து வந்து, தீ விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச் சென்றதாக அருகிலுள்ள ரொய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் ஒருவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் காயமடையாத நோயாளிகளும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈராக் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் காதிம் போஹனை மேற்கோளிட்டு, நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 120 பேரில் 90 பேர் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், தீயை அணைத்துள்ளதாகவும் அரச செய்தி நிறுவனமான ஐ.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

https://twitter.com/i/status/1386082639396757509

ஈராக்கில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102,5288.  இறப்புகள் 15,217 என்று சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

செம்மணிக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் நீதிக்கோரிய போராட்டம்

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள...

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்