ரிஷாத் ஏன் கைது செய்யப்பட்டார்?: வீரசேகர விளக்கம்!

Date:

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரினர் நடத்திய நீண்ட விசாரணையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இருவருமே தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நிதியைப் பெற அவர்களுக்கு உதவியதாகவும் ஆதாரங்கள் தெரிவித்தன என்று அமைச்சர் கூறினார்.

பொலிசார் தாக்குதல் தொடர்பான எட்டு ஆவணங்கள் சட்டமா அதிபர் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கணிசமான ஆதாரங்கள் சேகரிக்கப்படும் போதெல்லாம் விசாரணைகள் தொடரும் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்