நேற்று 672 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 98,722 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 657 பேர், பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிலிருந்து வந்த 15 நபர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று 216 நபர்கள் வைரஸிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 93,884 ஆக உயர்ந்தது.
தற்போது 4,202 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



