29.5 C
Jaffna
March 28, 2024
இந்தியா

கொரோனாவை விரட்ட, தீப்பந்தம் ஏந்தியபடி ‘கோ கொரோனா கோ’ என சொல்லியபடி ஓடிய மக்கள்; வைரல் சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கணேஷ்புரா கிராமத்தில், நள்ளிரவில் ஒன்று சேர்ந்த கிராம மக்கள், கொரோனாவை விரட்ட, தீப்பந்தம் ஏந்தியபடி ‘கோ கொரோனா கோ’ என்று சொல்லியபடி ஓடினர். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில், நேற்று ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை இதுபோல் வேறு எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கை அமல்படுத்தியதுடன், மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவை விரட்ட கிராம மக்கள் செய்த வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், அகர் மல்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா கிராமத்தை சேர்ந்த மக்கள், இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி ஓடினர். அப்போது அனைவரும் ‘கோ கொரோனா கோ’ என ஹிந்தியில் கத்திக் கொண்டே ஓடுகின்றனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், ‘கொரோனா காலத்தில், ஞாயிறு அல்லது புதன்கிழமையில், கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர், இவ்வாறு கையில் தீப்பந்தத்தை ஏந்தி கொண்டு, கிராம எல்லை வரை ஓட வேண்டும். பின்னர் அந்த தீப்பந்தங்களை எல்லைக்கு அப்பால் தூக்கி வீச வேண்டும். கொரோனாவிலிருந்து இது எங்கள் ஊரை காப்பாற்றும் என நாங்கள் நம்புகிறோம்’ என தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment