கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு வேட்டு: உப பிரதேச செயலகமாக பெயரிட உத்தரவு!

Date:

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் மீளவும் உப பிரதேச செயலகமாக தரமிறக்கப்படுகிறது.

கல்முனை உப பிரதேச செயலகத்தை, தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு தமிழ் மக்கள் நியாயமான கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்து வந்தனர். எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் அது இதுவரை சாத்தியமாகவில்லை.

கடந்த நல்லாட்சி காலத்தில் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மு.காவினரின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில், நிர்வாக அதிகாரங்கள் இல்லாத நிலையிலும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் என சம்பிரதாயபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

கணக்காளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையெடுத்து, அதுவும் இழுபறியாகி, கடந்த ஆட்சியில் அதுவும் சாத்தியமாகாமல் போனது.

இந்த நிலையில், தற்போதைய அரசு பதவியேற்றதை தொடர்ந்து, தற்போது பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து கல்முனை பிரதேச செயலகத்திற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என நாட்டப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றி, கல்முனை உப பிரதேச செயலகம் என புதிய பெயர்ப்பலகை நாட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதேச செயலாளர் இனிமேல் பிரதேச செயலாளர் என இலட்சினை பாவிக்க முடியாது, உப பிரதேச செயலாளர் என்றே பாவிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்