கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபு மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

Date:

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபை சவால் செய்யும் மனுக்கள் மீதான விசாரணை இன்று (19) ஐந்து பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழாமில் நீதிபதிகள் புவனேக அலுவிஹர, பிரியந்த ஜெயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரும் உள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கைகளிற்கான மையம், ட்ரான்பரன்ஷி இன்ரநஷனல், ஐக்கிய மக்கள் சகதி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி மற்றும் பல தரப்புக்ககளால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுக்களில் பிரதிவாளிகளாக சட்டமா அதிபர்  பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த சட்ட வரைவின் மூலம் நிறுவப்படும் ஆணைக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சவால் செய்கிறது என மனுதாரர் குறிப்பிடுகிறார்கள்.

அதன்படி, இந்த வரைபை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய...

செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” போராட்டம் நாளை ஆரம்பம்!

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி  “நீதியின் ஓலம் 2”  கவனயீர்ப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்