26.4 C
Jaffna
March 29, 2024
இந்தியா

ரஷ்யாவில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா..

கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது அதை இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளது கவலை அளிக்கிறது என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இதுவரை நாட்டில் 11 கோடிக்கும் அதிமான பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருத்துவ தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த மூத்தஅதிகாரி ஒருவர் கூறும்போது, “கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

எனவே, ரஷ்யாவில் இருந்து தடுப்பூசி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை எதிர்பார்த்த உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன” என்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment