கோட்டாபய தொலைபேசியில் மிரட்டினார்; ஆளுந்தரப்பு எம்.பி விஜயதாஷ ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு: பொலிஸ் முறைப்பாடு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்ன தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோசமான வார்த்தைகளில் அச்சுறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ச.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட வரைபு தொடர்பான அதிருப்தியை அவர் நேற்று வெளியிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி இன்று தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதாக தெரிவித்தார்.

“ஜனாதிபதியை போல அவர் பேசவில்லை. அச்சுறுத்தும் விதமான பேசினார். அதே தொனியில் பதிலளிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை. இப்போது எமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது“ என அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று (18) காலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, விஜயதாஷ ராஜபக்ச இந்த தகவலை தெரிவித்தார்.

அரச வளங்கள் விற்கப்படாது என்ற வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த போதும், முன்மொழியப்பட்ட துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் அபாயமானது என்பதை சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள், எனவே நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்ட வரைபுகள் முன்வைக்கப்பட்டால் அவர் தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்புவார் என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் ஜனாதிபதி இன்று அவரைத் தொடர்பு கொண்டு மோசமான மற்றும் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி ஒரு ஜனாதிபதியைப் போலவே இராஜதந்திர ரீதியில் பேசுவார் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“இருப்பினும், அவர் ஒரு அரச தலைவருக்குப் பொருந்தாத வகையில் பேசினார்,” என்று அவர் கூறினார்.

அதே தொனியில் பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.

“எங்கள் பாதுகாப்பு குறித்து இப்போது எங்களுக்கு கவலைகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

எப்போதும் தனது மனசாட்சியுடன் பணியாற்றி வருவதாகவும், நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு திட்டங்களுக்கும் உடந்தையாக இருக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தன்னுடன் நேற்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பௌத்த பிக்குவும் அரச தரப்பு உறுப்பினரால் மிரட்டப்பட்டதாக தெரிவித்தார்.

இதனால் பொலிஸ் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்