விக்னேஸ்வரனின் பொது வேட்பாளராக களமிறங்க தயாரில்லை: வேலன் சுவாமி பரபரப்பு அறிக்கை!

Date:

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் க.வி.விக்னேஸ்வரனின் பொதுவேட்பாளராக களமிறங்க தயாரில்லையென வேலன் சுவாமி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சில போராட்டங்களில் கலந்து கொண்டிருந்த வேலன் சுவாமிகளை, மாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கலாமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் குபீர் அறிவிப்பொன்றை விடுத்தார்.

அந்த அறிவிப்பு பல தரப்பினால் காட்டமாகவும், சில தரப்பினால் நகைச்சுவையாகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

போதாதற்கு, மாவை சேனாதிராசாவிற்கு தகுதியில்லை, வேலன் சுவாமிகளிற்கு தகுதியுள்ளதென கூறி, தனது அரசியல் தராதரத்தையே விக்னேஸ்வரன் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டார்

இந்த நிலையில், வேலன் சுவாமிகள் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

அவரது விளக்கத்தில்-

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அடிப்படை கொள்கைகளில் ஒன்று, அங்கத்தவர்கள் யாரும் கட்சி சார்ந்த அரசியலிலோ அல்லது தேர்தல் அரசியலிலோ ஈடுபட மாட்டோம் என்ற கொள்கைக்கு அடியேனும் விதிவிலக்கல்ல“ என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்