29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

புத்தாண்டில் யாழில் துயரம்: 8 வயது சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிளில் சிக்கி ஒன்றரை வயது சகோதரி பலி!

8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது.

இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் ஸ்ராட் செய்த போது, சிறுவனின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிள் நகர்ந்தது.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த, சகோதரியான ஒன்றரை வயது குழந்தையின் வயிற்று பகுதியின் மேலாக மோட்டார் சைக்கிள் ஏறியது.

உடனடியாக, குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிரிழந்திருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
+1
4
+1
2

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment