புத்தாண்டில் யாழில் துயரம்: 8 வயது சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிளில் சிக்கி ஒன்றரை வயது சகோதரி பலி!

Date:

8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது.

இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் ஸ்ராட் செய்த போது, சிறுவனின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிள் நகர்ந்தது.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த, சகோதரியான ஒன்றரை வயது குழந்தையின் வயிற்று பகுதியின் மேலாக மோட்டார் சைக்கிள் ஏறியது.

உடனடியாக, குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிரிழந்திருந்தது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்